tamilnadu

img

வீட்டில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட 3 சிம்பன்சி குரங்குகள் மீட்பு

கொல்கத்தா, செப்.22- கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதீப் குப்தா என்பவர் வனத்துறை அனுமதி அளித்ததாக போலியான ஆவணங்களை அளித்து காட்டில் வாழும் பறவைகளை இடமாற்ற முயன்றதாக அந்த மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கை ஏற்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. சுப்ரதீப் குப்தா வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோ தமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்ததும் விசா ரணையில் தெரிய வந்தது. சுப்ரதீப் குப்தா வீட்டில் நடத்திய சோத னையில் தலா 25 லட்சம் மதிப்புள்ள 3 சிம்பன்சி குரங்கும், தலா ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மார்மோசெட் எனப்படும் சிறிய வகை குரங்குகள் நான்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுங்க மற்றும் வனவாழ்வு சட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அதி காரிகளிடம் பொய்யான தகவல்களை குப்தா தெரிவித்துள்ளதாக வும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.